மக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்ட அமைச்சர்கள்!

Date:

குருநாகல், பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரை அப்பகுதி மக்கள் சிலர் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஆகியோர் பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு அங்கிருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கேலி கிண்டல் செய்தும் அவமானப்படுத்தியுள்ளனர்.

எனினும் எதிர்ப்பையும் மீறி அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

இந்த கலாசார நிலையத்தை பல அமைச்சர்கள் பல தடவைகள் திறந்து வைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...