மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

“2020 மற்றும் 2021 ஆகிய இரண்டிலும் மாண்வர்கள் 60% இற்கு மேல் பாடசாலைக்கு வர முடியாததால், இந்த ஆண்டு நாங்கள் பாடசாலை விடுமுறைக்கு அதிக நாட்கள் கொடுக்கவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இயன்றளவு பாடசாலை நேரத்தை ஒதுக்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், கல்வியாண்டின் முதலாம் தவணையை திங்கட்கிழமை (27) ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து பாடசாலைப் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீடுகளை பரிசீலித்து பெரும்பாலான பாடசாலைகள் தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செவ்வாய்கிழமை (28) மேற்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“புதிய கல்வியாண்டு பொதுவாக ஜனவரியில் தொடங்க வேண்டும். ஆனால் முடிந்தவரை கொவிட்-19 காரணமாக தாமதமான கால அட்டவணையை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். திட்டமிட்டபடி சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்தினோம்.

இப்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். 2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மற்றும் முடிவுகளை வெளியிடுவது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...