ரோகிதஷவின் கடன் அட்டையை திருடி 400 அமெரிக்க டொலர்கள் வரை மோசடி!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டையில் இருந்து கிட்டத்தட்ட 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான முறையில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாரஹன்பிட்டிய பொலிஸார், நீதிமன்றத்தில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளனர்.
நபர் ஒருவர் ரோகித ராஜபக்சவின் கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ரோஹித ராஜபக்ஷ கடந்த 3ஆம் திகதி மாத்தறையில் உள்ள வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடன் அட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் தலைமை அலுவலக மேலாளருக்கு உரிய வங்கிக் கணக்கு அறிக்கைகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என போலீஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...