விமான நிலையத்திற்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பாடசாலை மாணவன்!

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில், பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவர் நேற்று (25) BIA அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்து வெடிகுண்டு இருப்பதாகக்  கூறியுள்ளார்.

அதிகாரிகள் முனையத்தை சோதனை செய்தபோது, ​​சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் இல்லை என்றும் அது நகைச்சுவை என்றும் தெரிவித்தார்.

களுபோவில பிரதேசத்தில் வசிக்கும்  பாடசாலை மாணவனை வரவழைத்த பொலிஸார், பின்விளைவுகளை உணராமல்  அழைப்பு குறித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதனையடுத்து குறித்த மாணவனை  கடுமையாக கண்டித்து, தான் செய்த செயலின் தீவிரம் தனக்கு தெரியவில்லை என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...