சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளை வொஷிங்டனில் சந்தித்து இலங்கையில் நடைபெறவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆறு மாத கால மீளாய்வு தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில் தம்முடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் நிதியமைச்சின் செயலாளரும் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.