அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் தொடர்பான விபரங்கள்!

Date:

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன.

இதற்கமைய பொதுஜன பெரமுன இந்த வருடத்திற்கான தொழிலாளர் தின நிகழ்வை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் முன்னெடுக்கவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிற்பகல் 02 மணியளவில் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் பி ஈ குணசிங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பீ ஆர் சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிலாளர் தினக்கூட்டம் கண்டி பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...