ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய பொது இடங்களில் கெமராக்கள்!

Date:

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப் அணியாத இளம் பெண் மாஷா அமினி போலீஸ் காவலில் பலியானதைத் தொடர்ந்து, அந்நாட்டு பெண்கள் ஹிஜாப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களை கெமராக்கள் மூலம் கண்டறி ந்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை ‘மதிப்புகளைப் பாதுகாத்தல், குடும்ப தனியுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் மன ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பேணுதல் ஆகியவற்றின் பின்னணியில், சட்டத்திற்கு எதிரான எந்தவொரு தனிப்பட்ட அல்லது கூட்டு நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று Tasnim  செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஹிஜாப் அணியாததால் இரண்டு பெண்கள் மீது ஆண் ஒருவர் தயிர் சட்டியை வீசிய காட்சி இந்த மாத தொடக்கத்தில் வைரலானது. ஈரானின் ஆடைக் குறியீட்டை மீறியதற்காக இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...