ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது ரஷ்யா!

Date:

ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தலைமை பதவியை வகிக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மீதான பனிப்போருக்குப் பிறகு மேற்கு நாடுகளுடன் உறவுகள் மிகக் குறைந்த நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஷ்யா தலைமைத்துவத்தை பொறுப்பேற்றமையானது சர்வதேச சமூகத்தின் முகத்தில் அறைந்தமைக்கு சமம் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பதவியை துஷ்பிரயோகம் செய்வதற்கான முயற்சியை அனைவரும் ஒன்றிணைத்து முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இருப்பினும், சபையில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவை தலைமை பதவிக்கு வருவதை தடுக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...