கொழும்பில் மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

Date:

நாளாந்தம் கொழும்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபையால்  இந்த வாகன நிறுத்துமிடங்கள் தனியார் மற்றும் அரச துறைகளின் ஆதரவுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மாடி வாகன நிறுத்துமிடங்களில் இரண்டு UDA வினால் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஏனைய இரண்டு வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்னால், பழைய மீன் சந்தை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு -02 இல் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்ட பொது வாகன தரிப்பிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

தனியார் நிறுவனமான அக்சஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தால் இந்த கார் நிறுத்துமிடம் 1400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்,கார் நிறுத்துமிடத்தின் உரிமை 30 வருடங்களுக்கு பின்னர் UDA க்கு மாற்றப்படும்.

எட்டு அடுக்குகளைக் கொண்ட இந்த கார் நிறுத்துமிடத்தில் 300 வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. ஒப்பந்தத்தின்படி, கார் நிறுத்துமிடத்தின் மாத வருமானத்தில் 20% UDA பெறும்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...