சூடானில் உயிரியல் ஆய்வகத்தை கைபற்றிய போராளிகள் :உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Date:

சூடானில் உள்ள அபாயகரமான உயிரியல் ஆய்வகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில், ராணுவ தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை இராணுவ படையான ஆர்.எஸ்.எப் பிரிவும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச அமைப்புகள் வாயிலாக இயங்கும், உயிரியல் ஆய்வகத்தை, போராட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து, சூடானில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி, நிமா சயீத் அபிட் கூறுகையில், ஆய்வகத்தை, கைப்பற்றியுள்ள போராட்டக்குழுவினர் விஞ்ஞானிகளை வெளியேற்றியுள்ளனர்.

ஆய்வகத்துக்குள் வல்லுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், உள்ளே உள்ள முக்கிய பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படாமல் உள்ளது.

ஆய்வகத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால், இரத்த கையிருப்புகள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதோடு, பெரியளவில் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...