டுபாயிலுள்ள இலங்கை பௌத்தர்களால் இப்தார் உணவுகள் விநியோகம்

Date:

டுபாயில் உள்ள இலங்கை பௌத்த சமூகம் அண்மையில் டுபாயின் அல் முஹைஸ்னாவில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு 1,500 இப்தார் உணவுகளை வழங்கியது.

கர்ஹூட்டை தளமாகக் கொண்ட லங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையத்தினால் ரமழான் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு மதம் மற்றும் சமூகம் தலைமையிலான சங்கம் என்ற வகையில், இந்த விநியோகம் நன்றியுணர்வின் சைகையாகவும், ரமழானின் போது சமூகங்களுக்கிடையில் மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையத்தைச் சேர்ந்த மூவாகம்மன சாந்த தம்ம தேரர், “இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உதவுவது மட்டுமன்றி, புனிதமான ரமழான் மாதத்தில் கருணை கொடுக்கும் மனப்பான்மை மற்றும் ஆசீர்வாதங்களை மேம்படுத்த உதவுகின்றன என்றார்.

ஸ்ரீலங்காராமய பௌத்த விகாரை மற்றும் தியான நிலையம் என்பது ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் இலங்கை பௌத்தர்களின் சமய மற்றும் கலாசாரத் தேவைகளுக்கு சேவை செய்வதற்காக சமூக அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் 2018 இல் நிறுவப்பட்ட ஒரு சமூக அமைப்பாகும்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...