தூய்மையான சக வாழ்வின் வெளிப்பாடாக வந்த நோன்புப் பெருநாள் வாழ்த்து!

Date:

கடந்த இரண்டு வருடங்களாக புத்தளம் பிரதேசத்தில் சர்வமத அமைப்பின் மூலம் அறிமுகமாகி பல்வேறு சமய, நல்லிணக்க பணிகளில் உற்சாகமாக பணியாற்றி வருபவர்.

புத்தளம் நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் பணியாற்றும்  அருட் சகோதரரி ரட்னமலர்  மத பேதமின்றி அனைத்து சமூகங்களிடையேயும் நெருக்கமான உறவைப் பேணுபவர்.

தொலைபேசியில் உரையாடுவது, அன்பளிப்புக்களை பரிமாறுவது மட்டுமன்றி தனது தேவாலயம் மூலமாக வறிய குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் போது, முஸ்லிம்கள் தரப்பிலிருந்து தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு எம்மிடமே ஆலோசனை பெறுவார்.

இந்த உறவின் வெளிப்பாடாக, பெருநாள் தினமான நேற்று,  அனுப்பிய வாழ்த்து அர்த்தம் நிறைந்த ஒன்றாக இருப்பதால் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எகீனா
கடும் சூட்டையும் தாங்கி…..
வெயிலின் கொடுமையையும் தாங்கி…….
வலிதரும் தாகத்தையும் தாங்கி……
வயதான உம்மாவையும் தாங்கி…..
இவை எல்லாவற்றையும் விட கடைக்குட்டியின் அழுகையையும் தாங்கி……..
கடைபிடித்து பெற்ற நோன்புப் பெருநாளிலே……….
சகல தீமைகளும் அகன்று……..
சகல நன்மைகளையும் நிறைவாய் பெற……….
நோன்பின் பலனை நிறைவாய் பெற…….
உங்கள் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள் 🤝

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...