‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய முடியும்’

Date:

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை உச்ச நீதிமன்றில் சவால் செய்ய பொதுமக்கள் பிரதிநிதிகள் அல்லது ஆர்வமுள்ள எந்தவொரு தரப்பினருக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமூலம் மீதான விவாதத்தின் போது திருத்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரசாங்கம் சட்டமூலத்தை பின்கதவால் கொண்டு வரவில்லை எனவும் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் திறந்திருப்பதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சத்தை தூண்டுவதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் ஈடுபட்டு அனைத்து இலங்கையர்களையும் பாதுகாக்க பொருத்தமான சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைவில் உள்ள சில விதிகள் குறித்து உலக மற்றும் உள்ளூர் சமூகம் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதாக நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிர்வாகம் நெகிழ்வானது என்றும், சட்டமூலத்தை மேலும் ஆலோசித்த பின்னர் அவற்றைத் திருத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...