பாடசாலை காலணிகள், புத்தகப்பை விலைகள் குறைகின்றன !

Date:

 பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளின் விலையை 500 முதல் 1000 ரூபா வரை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (25) மாலை நிதியமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் புத்தகப்பை உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால், பாடசாலை பைகள் மற்றும் காலணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், இதன் பயனை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குமாறும் உற்பத்தியாளர்களிடம் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மே 9ஆம் திகதிக்குப் பிறகு புத்தகப்பைகள் மற்றும் காலணிகளின் விலையை 500 முதல் 1000 ரூபாய் வரை குறைக்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...