பி.பி.சி நிறுவனத்தின் தலைவர் திடீர் இராஜினாமா!

Date:

பி.பி.சி நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் இராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பி.பி.சி நிறுவனத்தின் தலைவராக பிரிட்டனின்  ரிச்சர்ட் ஷாரப் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்  பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப், கன்சர்வேடிவ் கட்சியின் மிகப் பெரும் நன்கொடையாளராக இருந்து வருகிறார்.

கடந்த, 2021 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சனுக்கு பெரிய அளவில் (ஒரு பில்லியன் டொலர் ) நன்கொடை அளித்துள்ளார்.

அதற்கு பரிசாக தான் அரசாங்கத்தின் பரிந்துரையின்படி, அவர் பி.பி.சி., தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

எனவே ரிச்சர்ட் ஷார்ப் நியமனம் பி.பி.சி.யின் நடுநிலைதன்மை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.  இதையடுத்து, ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...