எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.