புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது!

Date:

சித்திரை புதுவருடத்திற்காக கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் இதிபொலகே தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் இரவு 7.30க்கு கொழும்பிலிருந்து பதுளை வரை ரயிலொன்றும் மாலை 5.20க்கு பதுளையிலிருந்து கொழும்பு வரை ரயிலொன்றும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏப்ரல் 5ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் காலை 6.30 க்கு கொழும்பிலிருந்து பதுளை வரை பயணிக்கும் ரயில் மற்றும் காலை 7 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயிலும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவைதவிர ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கோட்டை முதல் காலி வரை விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலியிலிருந்து கோட்டை வரையில் விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவையொன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதான நகரங்களுக்கு இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வரணஹம்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த விசேட பஸ் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேவைக்கேற்ப தனியார் பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...