புருனே நாட்டிலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வு

Date:

புருனே நாட்டில் வசிக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் நேற்று (8) இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தனர்.

உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் எல்லா இடங்களில் தங்களுடைய ரமழானுடைய முக்கியமான வணக்கமாக இருக்கின்ற நோன்பு திறக்கும் நிகழ்வை பல்வேறு விதமான முறையிலேயே அனுஸ்டித்து வருகின்றார்கள்.

இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் தங்களுடைய சமூக ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் சமகால விவகாரங்களையும் கருத்து பரிமாற்றுங்களுக்கான சந்தர்ப்பமாகவும் தமக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை பலப்படுத்தும் வகையில் இந்த இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.

அந்த வகையில் நேற்று  புருனே நாட்டில் பெர்பி என்ற இடத்தில் Wafa hotel-லில் மனிதநேய சொந்தங்களின் ஏற்பாட்டில் ‘இஃப்தார் -நோன்பு துறப்பு ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும் மனிதநேய ஜனநாயக் கட்சின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும் புருனே யில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும்  இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...