யாழ்ப்பாணத்தில் சேதன முறையில் பயிரிடப்பட்ட புளி வாழைப்பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி!

Date:

யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சேதன புளி வாழைப்பழங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 25,000 கிலோ சேதன புளி வாழைப்பழங்கள் முதல் ஏற்றுமதி தொகுதியாக இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 600 விவசாயிகள் புளி வாழை செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ராஜாங்கனையில் பயிரிடப்பட்ட புளி வாழைப்பழங்கள் 18 தடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதிப் பங்களிப்பின் கீழ் புளி வாழை ஏற்றுமதி வலயங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...