விடைத்தாள்கள் திருத்தும் பணி தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பு

Date:

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கினால், விடைத்தாள்களை உடனடியாக சரிபார்க்கும் பணியை ஆரம்பிக்க தயார் என அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கையால் அநீதி இழைக்கப்படும் எங்கள் உறுப்பினர்களுக்குச் சிறிது நிவாரணம் தேவை என்ற அடிப்படையில். உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக நாம் முடிவு செய்துள்ளோம்.

இதில் வேறு எந்த கோரிக்கையும் இல்லை. அதே சமயம் சிளர் இனவாத பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர். இங்கு சிங்களம்,தமிழ் என்ற பேச்சு கிடையாது.

இதில் கலந்து கொள்ளாத அனைவரும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் மட்டுமின்றி பாடசாலை ஆசிரியர்களும் கூட. அதனால்தான் இந்த நிலை தொடர்கிறது.

தொடரும் இழுபறிக்கு நாம் பொறுப்பல்ல. எனவே அரசாங்கம் சாதகமான பதில் அளித்தால் எந்த நேரத்திலும் இப்பணியை தொடங்க தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...