வெசாக் தன்சல்கள் வெகுவாக குறையும்: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Date:

ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வெசாக் போயாவை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களின் (தானசாலைகளின் ) எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார் .

சில சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தன்சல்கள் நடத்துவது குறித்து யாரும்பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் .
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் கூறியதாவது:

“இந்த ஆண்டு, வெசாக் தன்சல் பற்றி எங்களுக்கு எந்த பதிவுகளும் இடப்பெறவில்லை. பெரும்பாலான சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு இதுவரை தன்சல்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாக இந்த ஆண்டு தன்சல்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்சல் நடத்த விரும்பினால், வழக்கம் போல் சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவும். அதுபற்றி தகவல் தெரிவித்த பின், அங்கு சென்று, இடங்களை சரிபார்த்து, தேவையான அறிவுரைகளை வழங்குவோம். தன்சல் நடைபெறும் நாட்களில் அந்தந்த இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Popular

More like this
Related

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...