அமைதியும் நல்லிணக்கமும் வலிமைப்பெற உறுதியேற்போம்: தமிழ்நாடு ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி

Date:

அமைதியும் நல்லிணக்கமும் வலிமைப்பெற உறுதியேற்போம் என தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் கொண்டாடப்படும் இன்பத் திருநாட்களில் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் முதன்மையானது. ரமலான் மாதம் முழுவதும் இறையச்சத்தோடு நோன்பிருந்து அதன் நிறைவாக இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

நீலவானத்தில் தோன்றும் மெல்லிய வெண்பிறையை வசந்தத்தின் வருகையாக கருதி; உலகமெங்கும் கொண்டாட்டங்கள் தொடங்குகிறது.

இறை உவப்பை நாடி, ஏழைகளை தேடி வீதிகளில் ஓடி ஓடி செய்யும் உதவிகள் இப்பெருநாளை ஈகைத்திருநாளாக முன்னிறுத்துகிறது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தி; செல்வங்களை பகிர்ந்தளித்து இப்பெருநாளை உலகமெங்கும் 200 கோடி மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய திருநாட்டில் 25 கோடி மக்களின் இதயத்திருநாளாகவும் இப்பெருநாள் திகழ்கிறது.

இந்நன்னாளில் தாய்மண்ணை துறந்து வாடும் அகதிகளின் நலன்களுக்காகவும், சிறைகளில் கதறி அழும் அப்பாவிகளின் விடுதலைக்காகவும், வறுமையோடு மோதி காயப்படும் ஏழைகளின் மேன்மைக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

மேலும், நமது தாய் மண்ணில் அமைதியும், நல்லிணக்கமும் வலிமைப்பெற உறுதியேற்போம் என வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...