அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளால் 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

Date:

அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் காரணமாக 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் உழைக்கும் போதே வரி அறவீடு போன்ற பல காரணிகளினால் இவ்வாறு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளிறேி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களில் நிபுணத்துவ மருத்துவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் மந்த போசனை நிலவி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வரும் நிலையில், அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவில் கடமையாற்றிய நான்கு மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை நடாத்த வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் தமது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...