அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் தொடர்பான விபரங்கள்!

Date:

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன.

இதற்கமைய பொதுஜன பெரமுன இந்த வருடத்திற்கான தொழிலாளர் தின நிகழ்வை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் முன்னெடுக்கவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிற்பகல் 02 மணியளவில் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் பி ஈ குணசிங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பீ ஆர் சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிலாளர் தினக்கூட்டம் கண்டி பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...