அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Date:

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமழான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ள நிலையில், மசூதிக்குள் இருந்தவர்களை இஸ்ரேல் பொலிஸார் தாக்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

மசூதிக்குள் நடந்த தாக்குதலுக்கு பலஸ்தீன அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர்கள் பட்டாசுகள், கற்களுடன் மசூதிக்குள் புகுந்ததால், தாங்களும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி யதாகவும் இஸ்ரேல் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான பெய்ட் உம்மரில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்தனர் மற்றும் இஸ்ரேலிய வீரர்கள் மீது பாறைகள் மற்றும் வெடிபொருட்களை வீசியதாக சர்வதேச ஊடகஙகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...