அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Date:

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமழான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ள நிலையில், மசூதிக்குள் இருந்தவர்களை இஸ்ரேல் பொலிஸார் தாக்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

மசூதிக்குள் நடந்த தாக்குதலுக்கு பலஸ்தீன அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர்கள் பட்டாசுகள், கற்களுடன் மசூதிக்குள் புகுந்ததால், தாங்களும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி யதாகவும் இஸ்ரேல் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான பெய்ட் உம்மரில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்தனர் மற்றும் இஸ்ரேலிய வீரர்கள் மீது பாறைகள் மற்றும் வெடிபொருட்களை வீசியதாக சர்வதேச ஊடகஙகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...