இனப்பெருக்க நோக்கங்களுக்காகவே குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப ஏற்பாடு: விவசாய அமைச்சு

Date:

குரங்குகள் இனப்பெருக்க நோக்கத்திற்காக சீனாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விவசாய அமைச்சு இன்று தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Animal Breeding Limited என்ற சீன நிறுவனம் 100,000  குரங்குகளை கோரியதாக அவர் கூறினார்.

கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சகம் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மையத்தை திறந்துதுள்ளதாகவும் குரங்குகளை ஏற்றுமதி செய்வது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத் துறையினர், மதத் தலைவர்கள், விஞ்ஞானிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான மற்றும் சிறந்த யோசனைகளை சேகரிக்கும் அதே வேளையில்,  குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும்போது சிறந்த முடிவை எடுக்க அமைச்சகம் நம்புகிறது.

குரங்குகளால் பெருமளவிலான பயிர்கள் அழிக்கப்படும் பிரதேசங்களில் இருந்து குரங்குகளை அகற்றுவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

காடுகள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளில் இருந்து குரங்குகளை அகற்றும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...