இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இருவருக்கும் தமிழகத்தில் வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமான “தி இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.