இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் இடைக்கால குழுவின் அறிக்கை கையளிப்பு

Date:

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக மற்றும் நிதி பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய இடைக்கால குழு தனது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி தலைமையில் விசேட குழுவொன்றை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு முதல் கால்பந்து அரசியலமைப்பு தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதம், நிதி நிர்வாகம் மற்றும் ஆட்சேர்ப்பு பணியாளர்கள் போன்றவை குறித்து குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த  ஜனவரி 21, அன்று, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) FIFA கவுன்சிலின் பணியகம் எடுத்த முடிவின்படி, அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து சம்மேளனம் மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில் இலங்கை கால்பந்து சம்மேளனம்   FIFA சட்டங்களின் 13வது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள அதன் அனைத்து உறுப்பினர் உரிமைகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...