ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய பொது இடங்களில் கெமராக்கள்!

Date:

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்காக பொது இடங்களில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், முறையாக ஹிஜாப் அணியாத இளம் பெண் மாஷா அமினி போலீஸ் காவலில் பலியானதைத் தொடர்ந்து, அந்நாட்டு பெண்கள் ஹிஜாப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களை கெமராக்கள் மூலம் கண்டறி ந்து, அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை ‘மதிப்புகளைப் பாதுகாத்தல், குடும்ப தனியுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் மன ஆரோக்கியம் மற்றும் மன அமைதியைப் பேணுதல் ஆகியவற்றின் பின்னணியில், சட்டத்திற்கு எதிரான எந்தவொரு தனிப்பட்ட அல்லது கூட்டு நடத்தையையும் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று Tasnim  செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஹிஜாப் அணியாததால் இரண்டு பெண்கள் மீது ஆண் ஒருவர் தயிர் சட்டியை வீசிய காட்சி இந்த மாத தொடக்கத்தில் வைரலானது. ஈரானின் ஆடைக் குறியீட்டை மீறியதற்காக இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...