‘ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை’: கொழும்பு பேராயர்

Date:

அரசியல் வாதிகள் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு தாங்கள்தான் முதலாளி என நினைப்பதாகத் தெரிகிறது என கொழும்பு, பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை, நீதிக்காக போராடுவது முக்கியமானது எனவும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் என்ன நடந்தது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்றும், மக்கள் பல விஷயங்களைச் சொல்கிறார்கள் என்றும், அதனால்தான் நீதிக்காகப் போராடுவது முக்கியம் என்றும் பேராயர் கூறினார்.

சிலர் மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் இருக்கும் முறையை தொடரட்டும் என்று கூறினாலும் இளைஞர்கள் போராடி இலங்கையின் அரசியல் முறையை மாற்றினார்கள் என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...