இவ்வருடம் உலகில் பார்வையிட சிறந்த 23 நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கைகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த 23 நாடுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம், கண்டி, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகவும், இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.