உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்?

Date:

மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழு, புதிய எல்லைகளை நிர்ணயித்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,714 ஆக குறைக்க முன்வந்துள்ளது.

இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஏறக்குறைய பாதியாகக் குறைத்து, நாடு முழுவதிலும் உள்ள மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களை பராமரிப்பதற்காக அரசால் செலவிடப்படும் பாரிய தொகை மிச்சமாகும்.

தற்போதுள்ள முறைப்படி, அடுத்த தேர்தலில் 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான ஐவரடங்கிய எல்லை நிர்ணய குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையில் இந்த பிரேரணை உள்ளடக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைப்புகளின் எல்லைகளை நிர்ணயம் செய்யவும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை நவம்பரில் குறைக்கவும் குழு நியமிக்கப்பட்டது.

இது தொடர்பான வர்த்தமானியை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டார்.

இந்தக் குழுவில் மஹிந்த தேசப்பிரியவுக்கு மேலதிகமாக ஜயலத் ஆர்.வி.திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அறிக்கையை கையளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...