ஏழைகளின் விடயத்தில் அதிகமாக கவனம் செலுத்துங்கள்: நோன்புப் பெருநாள் செய்தியில் ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

Date:

´ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்  (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (ஸுறா பகரா: 185) என்ற இறை கட்டளைக்கிணங்க இறைநெருக்கத்தையும் தக்வாவையும் இலக்காகக் கொண்டு அருள்மிகு ரமழானில் கடமையாக்கப்பட்ட ஒருமாத கால நோன்பை அல்லாஹ்வுக்காக பெருநாளை அடைந்திருக்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சிகரமான நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தமது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் எமது குடும்ப உறவுகள், அண்டை அயலவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் ஆகியோரின் தேவைகள் விடயத்திலும் அதிக கவனம் செலுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

மார்க்கம் வழிகாட்டியுள்ள பிரகாரம் பெருநாளை சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் அதேவேளை எம்மைச் சுற்றியுள்ள எமது உறவினர்கள் மற்றும் அயலவர்களும் இத்தினத்தை மனநிறைவுடன் கழிப்பதற்கு வழிசெய்வோம்.

எல்லாம் வல்ல அல்லா{ஹ தஆலா நாம் நோற்ற நோன்புகளையும் எமது அமல்களையும் அங்கீகரித்து உயர்ந்த நற்கூலிகளைத் தந்தருள்வதோடு ரமழானில் நாம் அடைந்த பக்குவத்தையும் அல்குர்ஆனுடனான நெருக்கமான உறவையும் கொண்டு அல்லாஹு தஆலா பொருந்திக்கொண்ட சமூகமாக வாழ நல்லருள் புரிவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நோன்புப் பெருநாள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...