கடன் தொடர்பில் இலங்கைக்கு பங்களாதேஷ் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியது!

Date:

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர் கடனின் முதல் தவணையை வழங்க பங்களாதேஷிடம் கால அவகாசம் கேட்டது, அதற்குள் தனது கடனை மறுசீரமைக்க முடியும் என்று நம்புகிறது.

ஆனால், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது, இலங்கை இன்னும் 6 மாத கால அவகாசம் கோருகிறது.

மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முதல் தவணையையும் செப்டெம்பர் மாதத்திற்குள் மற்றொரு தவணையையும் வழங்குவதாக கூறியதாக பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரூஃப் தாலுக்டர் தெரிவித்தார்.

வொஷிங்டனில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடனான  சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை, 2021 மே மாதம் இந்த நிதியை கடனாகப் பெற்றது. கடன் திருப்பிச் செலுத்தும் காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...