கடன் தொடர்பில் இலங்கைக்கு பங்களாதேஷ் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியது!

Date:

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர் கடனின் முதல் தவணையை வழங்க பங்களாதேஷிடம் கால அவகாசம் கேட்டது, அதற்குள் தனது கடனை மறுசீரமைக்க முடியும் என்று நம்புகிறது.

ஆனால், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது, இலங்கை இன்னும் 6 மாத கால அவகாசம் கோருகிறது.

மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முதல் தவணையையும் செப்டெம்பர் மாதத்திற்குள் மற்றொரு தவணையையும் வழங்குவதாக கூறியதாக பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரூஃப் தாலுக்டர் தெரிவித்தார்.

வொஷிங்டனில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடனான  சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை, 2021 மே மாதம் இந்த நிதியை கடனாகப் பெற்றது. கடன் திருப்பிச் செலுத்தும் காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...