கல்முனையில் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சத்தில்

Date:

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பகுதிகளில்  கடந்த 3 நாட்களாக திடிரென யானைகள் உட்புகுந்து அட்டகாசம் செய்வதுடன் பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளன.

மேற்குறித்த பகுதிகளில் இவ்வாறு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக  உட்புகுந்து மதில்கள் கட்டிடங்களை உடைத்து சேதம் விளைவித்து வருகின்றன.

மேலும் வேளாண்மை செய்கைக்காக விதைப்பதற்கு வைத்திருந்த முளைநெற்களையும் சேதப்படுத்தி வருகின்றதுடன் பொது மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இது தவிர குறித்த யானைகள் அங்குள்ள பொதுமக்களின் வீட்டுத்தோட்டம் என்பவற்றையும் பிடுங்கி சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் வனபரிபாலன திணைக்களத்திற்கும் பொதுமக்கள் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.

மேலும் அண்மைக்காலமாக தினம் தோறும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதனால் யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி காட்டிற்கு விரட்டுவதற்கு அவ்விடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களம் வருகை தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொது மக்கள் மத்தியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...