காலி முகத்திடலில் ஆரம்பமான மக்கள் ‘போராட்டத்திற்கு’ இன்றுடன் ஓராண்டு பூர்த்தி

Date:

2022 ஏப்ரல் 9ஆம் திகதி காலி முகத்திடல் ஆரம்பமான மக்கள் ஆர்ப்பாட்ட களத்திற்கு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் (09)  காலிமுகத்திடலில் நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘கோட்டா தோல்வி ரணில் விற்பனை’, பயங்கரவாதச் சட்டத்தை ரத்து செய், மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு புகையிரத நிலையத்தில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘அரகலயா’ மே 9 ஆம் திகதி பாரிய இயக்கமாக மாறியது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கம் உட்பட பல அரசாங்க அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டு போராட்டம் காரணமாக பதவிகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

இதில் கலந்துகொண்ட சம்பவங்களால் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 40 பேர் இறந்தனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...