குருவிக்கு பதிலாக நாய்: ட்விட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்!

Date:

ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிய எலான் மஸ்க் தற்போது ட்விட்டரின் லோகோவை மாற்றியிருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல சிக்கல்கள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இவருக்கு எதிராக பல வழக்குகளும் தொடர்ந்துக் கொண்டே வந்தது. இவர் தற்போது டோஜ்காயினுக்கு பயன்படுத்தப்படும் நாய் படத்தை, தனது ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.

முன்னதாக நீல நிற குருவி ஒன்று இருந்தது தற்போது அதற்கு பதில் நாய் புகைப்படம் ஒன்று லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.

ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.

எலான் மஸ்க் திடீரென லோகோவை மாற்றக் காரணம் என்ன? அதுவும் நாயின் லோகோவை வைத்தற்கான காரணம் என்பது பற்றி இன்னும் விரிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை.

நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் டுவிட்டர் லோகோவான நீலநிற குருவியையும் இப்போது மாற்றியுள்ளமையானது டுவிட்டர் பயனர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...