கொழும்பில் பல இடங்களில் நீர் விநியோகம் தடை!

Date:

கோட்டே ஜூப்லி நீர் தாங்கிக்கு நீரேந்திச் செல்லும் பிரதான குழாயில் பத்தரமுல்லை பொல்தூவ பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடுவெல, கோட்டை, மஹரகம, பொரலஸ்கமுவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளிலும் இன்றிரவு 09 மணி வரை நீர்விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் கசிவை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை முன்னெடுக்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...