கொழும்பில் மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

Date:

நாளாந்தம் கொழும்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபையால்  இந்த வாகன நிறுத்துமிடங்கள் தனியார் மற்றும் அரச துறைகளின் ஆதரவுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மாடி வாகன நிறுத்துமிடங்களில் இரண்டு UDA வினால் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஏனைய இரண்டு வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்னால், பழைய மீன் சந்தை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு -02 இல் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்பட்ட பொது வாகன தரிப்பிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

தனியார் நிறுவனமான அக்சஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தால் இந்த கார் நிறுத்துமிடம் 1400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன்,கார் நிறுத்துமிடத்தின் உரிமை 30 வருடங்களுக்கு பின்னர் UDA க்கு மாற்றப்படும்.

எட்டு அடுக்குகளைக் கொண்ட இந்த கார் நிறுத்துமிடத்தில் 300 வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. ஒப்பந்தத்தின்படி, கார் நிறுத்துமிடத்தின் மாத வருமானத்தில் 20% UDA பெறும்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...