சூடானில் உள்ள இலங்கையர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சவூதி அரேபியா!

Date:

சூடானில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களின் இரண்டாவது குழு சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள கிங் பைசல் கடற்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தக் குழுவில் 06 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இக்குழுவினரை சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சியூலர் அலுவலகம் பொறுப்பேற்றுள்ளது.

சூடானில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அங்கு தங்கியிருந்த 13 இலங்கையர்கள் அண்மையில் ஜித்தாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களை திரும்பப் பெறுவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் ஆதரவளிப்பதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சூடானில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையர்களும் போர்ட் சூடானில் உள்ள அல் ரவுதா ஹோட்டலில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...