ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட ஓகொடபொல உடுகொட கிளையினால் உலமாக்களுக்கான ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட ஓகொடபொல உடுகொட கிளையினர் ஏற்பாடு செய்த பிரதேச உலமாக்களுக்கான ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் ஓகொடபொல மஸ்ஜிதுல் பலாஹில் கடந்த 09 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் பல மூத்த உலமாக்களும் இளம் உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் தலைமையுரையுடன் புதிய நிர்வாக சபை அறிமுகம், உலமாக்கள் பரஸ்பர அறிமுகம், சபையோர் கருத்துக்கள் என்பன இடம் பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதேசத்தில் உள்ள ஐந்து ஜும்ஆப் பள்ளிவாயல்களின் நிர்வாக சபை உறுப்பினர்களில் தலா இருவர் வீதம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தலைவர்  தனதுரையில் உலமாக்களின் பொறுப்பையும் உலமாக்களும் பள்ளிவாயல்களும் இணைந்து தொழிற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உலமாக்களுக்கும் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் குறிப்பாக நிகழ்ச்சிக்குப் பூரண அனுசரணை வழங்கிய அல்ஹிமா இஸ்லாமிய சேவை நிலையத்திற்கும், பள்ளிவாயலில் அனுமதி வழங்கிய ஓகொடபொல பள்ளிவாயல் நிர்வாகத்திர்க்கும், உணவு ஏற்பாடுகளைச் செய்த ஓகொடபொல உலமாக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுவினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கஹட்டோவிட   தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...