நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரிப்பு!

Date:

நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் நேற்று முன்தினம் ஒரு நாளுக்கான அதி கூடிய மின்சார தேவை பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேவைக்கு ஏற்ப நேற்று முன்தினம் நிகர மின் உற்பத்தி மணிக்கு 49.53 ஜிகா வோட்டாக பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய மின் தேவை 50 ஜிகா வோட்டையும் தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மின்சார தேவை அதிகரிப்பை கவனத்திற் கொண்டு ஹம்பாந்தோட்டையில் அண்மையில் நிறுவப்பட்ட டீசலில் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் உட்பட மின்சார சபைக்கு சொந்தமான அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...