பணவீக்க விகிதம் டிசம்பர் மாதத்திற்குள் ஒற்றை இலக்கமாக குறையும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Date:

டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் முன்னைய நிலையில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவிசாவளை, சித்தாவகபுர நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், அதிக பணவீக்க நிலைமைகளின் போது, ​​எமது நாடு உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

“ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, அதிக பணவீக்க விகிதத்துடன் ஐந்தாவது நாடாக நமது நாடு பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு தீவிரமான சூழ்நிலை. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பட்டியலில் இருந்து இலங்கையை பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நமது நாட்டில் 95% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் தற்போது 60% ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம் 70% ஆக இருந்த சராசரி பணவீக்கம் 50%க்கும் கீழ் குறைந்துள்ளது.

மேலும் இந்த விவரங்கள் மூலம், பல சிரமங்களை எதிர்கொண்டு மிக விரைவாக தன்னை மீட்டெடுக்கும் ஒரு நாடாக இலங்கையை அடையாளப்படுத்த முடியும்,  என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இலங்கை மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதுடன், இந்த டிசம்பருக்குள் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என கூறியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...