பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Date:

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சமூகத்துடனான விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், நிபுணர்கள் குழுவின் ஊடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பொருத்தமற்ற சரத்துக்களை நீக்குமாறு கடிதத்தின் மூலம் பிரதம பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த பீடங்களின் பிரதம பீடாதிபதி உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதன் பரந்த வரையறையை எடுத்துரைத்துள்ளார், இதன்படி அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் பதவியில் உள்ள அரசாங்கத்தின் குறைபாடுகள் பற்றி பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போதைய நிலையில் சட்டமூலத்தை நிறைவேற்றுவது இலங்கைக்கு பாதகமாக அமையும் எனவும் எனவே நிபுணர் குழுவொன்றின் உள்ளீடுகளை பெற்று சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...