பஹன மீடியாவின் கொழும்பு வாழ் பிரமுகர்களுடனான சந்திப்பும், இப்தார் நிகழ்வும்!

Date:

தூய இலங்கை என்ற தொலைநோக்குடன் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இயங்கி வருகின்ற பஹன மீடியா நிறுவனம் தனது பணிகளை மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் ஓர் அங்கமாக கொழும்பு வாழ் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை நேற்றைய தினம் (07) நடத்தியது.

கொழும்பு முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிளில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வாழ் கல்விமான்கள், மாகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பஹன மீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ். அப்துல் முஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இஸ்லாமோபோபியா எதிர்ப்பு தினம் தொடர்பில் சன்டே டைம்ஸ் பத்திரிகையின் பிரதி ஆசிரியரும், டெய்லி மிரர் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான அமீன் இஸ்ஸதீன் உரை நிகழ்த்தினார்.

தூய இலங்கை என்ற இலக்கை நோக்கிய பஹன மீடியாவின் பணிகள் தொடர்பான காணொளிகள் எடுத்துக் காட்டப்பட்டதோடு, எதிர்காலத்தில் இதற்கென முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளும் அவற்றை முன்னெடுப்பதற்கு நாட்டு மக்கள் பங்களிப்புச் செய்ய வேண்டியதன் அவசியமும் எடுத்துக் காட்டப்பட்டன.

பஹன மீடியாவின் நிவ்ஸ் நவ் ஊடகம், பஹன வெளியீட்டகம், பஹன அகடமி ஆகியவற்றின் செயற்பாடுகளும் பிரமுகர்களின் முன்னிலையில் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்வின் பின் பலரும் இந்தப் பணிக்கான தமது ஆதரவினைத் தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...