புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் உள்ளூராட்சித் தேர்தல்!

Date:

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம்  உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

உள்ளூராட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,714 ஆகக் குறைக்க எல்லை நிர்ணய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம், 8,000 க்கும் அதிகமான மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டுமாயின், அது குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

இது தொடர்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...