இஸ்லாமிய அரபு நாடான மொரோக்கோ நாட்டில் தற்போதைய மன்னராக இருக்கின்ற 2 ஆவது முஹம்மத் அவர்களுடைய அரண்மனையிலேயே ரமழான் தோறும் நடைபெறுகின்ற விசேட ரமழான் அமர்வுகளில் ஒன்றாக நேற்று 31 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் அறிஞருமான அஷ்ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொண்டு முன்மாதிரி மிக்க சமூகங்களாக எப்படி வாழ வேண்டும் என்ற தலைப்பிலேயே உரை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக மொரோக்கோ நாட்டின் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகி சமூக ஊடகமொன்றில் வெளியாகியுள்ளது.