மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம்!

Date:

ஒரு வாரத்தில் சுமார் 1800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் பருவமழை தொடங்குவதால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும்,  வாராந்தம் 1000 நோயாளர்கள் பதிவாகும் போதிலும், 500 நோயாளர்களே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற முடியும் என்றார்.

டெங்குவின் இனப்பெருக்க இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு நோயின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை 28,448 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 13,958 பேர் மேல் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்களே எனவும், பாடசாலைகளுக்கு அருகில் டெங்கு நுளம்புகள் பெருகுவது அதிகரித்துள்ளதாகவும், பாடசாலைகளைச் சுற்றியுள்ள சூழலை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 62 வீதமானவர்கள் 20 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...