ராம நவமி வன்முறை: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சிக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்

Date:

இந்தியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

தனது அதிகாரபூர்வ இணைய தளத்திலேயே இந்த கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை  தலைமைச் செயலகம் கண்டிக்கிறது.

ராம நவமி ஊர்வலத்தின் போது இந்தியாவின் பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தீவிரவாத ஹிந்து கும்பல் ஒன்று, கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி பீகார் ஷெரீப்பில் மதரஸா மற்றும் அதன் நூலகத்தை எரித்தது உட்பட பல வன்முறை மற்றும் நாசவேலைகளை ஈடுபட்டுள்ளதை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்  தலைமைச் செயலகம் ஆழ்ந்த கவலையுடன் அவதானித்தது.

இந்நிலையில், அமைப்பின் தலைமைச் செயலகம் இத்தகைய ஆத்திரமூட்டும் வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளது.

இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தின் மீதான இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முறையான இலக்குகளின் மீதான தெளிவான தாக்குதல் வெளிப்பாடாகும்.

இதுபோன்ற வன்செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, பாதுகாவல், உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், இந்திய அதிகாரிகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலகம் குறித்த அறிக்கையில் கேட்டுக்கொள்கிறது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...