13 ஆவது திருத்தம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து சர்வதேசத்துக்கு விளக்கம்!

Date:

13வது திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சர்வதேச சமூகத்துக்கு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி விளக்கமளித்துள்ளார்.

கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரிகளுக்கு இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு ஆதரவு வழங்கியமைக்காக சர்வதேச சமூகத்தினருக்கு நன்றி தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், இது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்குவிப்பதற்காக நாட்டின் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், நாடுகளின் பயண ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் அலிசப்ரி இதன்போது கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளையும் அமைச்சர் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை அமைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்த மேலதிக தகவல்களையும் வெளிவிவகார அமைச்சர் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...